×

ஊற்றி கொடுத்தார்... பேட்டி அமைச்சர் சி.வி.சண்முகம் மீது போலீசில் புகார்

திருவில்லிபுத்தூர்: விருதுநகர் மாவட்டம், திருவில்லிபுத்தூர் சர்க்கரை குளத்தை சேர்ந்தவர் சுரேஷ் நெப்போலியன். வழக்கறிஞரான இவர் நேற்று திருவில்லிபுத்தூர் நகர் காவல்நிலையத்தில் ஒரு புகார் மனு அளித்தார். அதில், ‘‘தமிழக சட்ட அமைச்சர் சி.வி.சண்முகம் நேற்று முன்தினம் ஊடகங்களில் பேட்டி அளிக்கும்போது டி.டி.வி.தினகரன் எங்களுக்கு ஊத்தி கொடுத்தார். அது அவர்களது குலத்தொழில் என தினகரன் சார்ந்த எங்கள் சமுதாய மக்களை இழிவுபடுத்தும்விதமாக பேசியுள்ளார். இது எங்களது சமுதாய மக்களிடம் மன வருத்தத்தையும், இளைஞர்கள் மத்தியில் கொந்தளிப்பையும் ஏற்படுத்தியுள்ளது. மேலும் இரு சமூகத்திடையே சாதி கலவரத்தை உண்டாக்கும் சூழ்நிலையை ஏற்படுத்தியுள்ளது. தினகரன் குடும்பத்தை குறிப்பிட்டு சொல்லாமல் ஒட்டுமொத்தமாக எங்கள் சமுதாயத்தை பழித்தும், இழித்தும் பேசிய சி.வி.சண்முகம் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என கூறியிருந்தார்.

Tags : CV Shanmugam , Interview Minister CV Shanmugam lodged a complaint with the police
× RELATED பாமகவை கூட்டணியில் இழுக்க அதிமுக இறுதிக்கட்ட முயற்சி!