திருவாரூர்: அமைச்சர் ராஜேந்திரபாலாஜி நேற்றுமுன்தினம் கும்பகோணம் அருகே பிரத்தியங்கராதேவி கோயிலில் நடைபெற்ற ரகசிய பூஜையில் கலந்துகொண்டு தரிசனம் செய்தார். சிறையில் இருந்து விடுதலையான சசிகலாவுக்காக இந்த பூஜை நடந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் திருப்பாம்புரம் சேஷபுரீஸ்வரர் கோயிலில் நேற்று நடந்த சிறப்பு பூஜையில் அவர் கலந்துகொண்டார்.