சென்னை: தொடர்ந்து பல மணி நேரமாக ஐஆர்சிடிசி முடங்கியுள்ளது.இந்தியாவின் மிகப்பெரிய ரயில்வே முன்பதிவு சேவை தளமான ஐஆர்சிடிசி தளம் தொடர்ந்து பல மணி நேரமாக முடங்கியுள்ளதால் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். மதியம் முதல் தொடர்ந்து முடங்கியுள்ளதால், பொதுமக்கள் ரயில் டிக்கெட் முன்பதிவு செய்ய முடியாமலும், முன்பதிவு செய்த டிக்கெட்களை ரத்து செய்ய முடியாமலும் தவித்து வருகின்றனர்.