சிவகாசி: சாத்தூர் பட்டாசு ஆலை வெடி விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். தீ விபத்தில் காயம் அடைந்தவர்கள் விரைவில் நலம் பெற வேண்டும் என்றும் பிரதமர் மோடி கூறியுள்ளார். உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு பிரதமரின் பொதுநிவாரண நிதியில் இருந்து தலா ரூ.2 லட்சம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தீ விபத்தில் காயம் அடைந்தவர்களுக்கு தலா ரூ.50,000 வழங்கப்படும் என்று பிரதமர் மோடி அறிவித்துள்ளார்.