மதுரை: தமிழகத்தில் குவாரிகளை அமைக்க அந்த இடத்தின் மாதிரிகளை ஆய்வு செய்த பின்னரே அனுமதி தர வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆய்வு செய்வதற்காக கனிமாத்துறையினர் உள்ளிட்டோரை கொண்ட உயர்மட்ட குழுவை அமைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. நீர்நிலைகளுக்கு அருகே பட்டா நிலங்களில் இருக்கும் மணல் அளவு குறித்து விரிவான ஆய்வு செய்ய குழுவுக்கு ஆணையிடப்பட்டுள்ளது. ஆய்வு செய்து அந்த பகுதிகளை பாதுகாக்கப்பட்ட பகுதியாக அறிவிக்க வேண்டும் என உயர்நீதிமன்ற கிளை உத்தரவிட்டுள்ளது.