விருதுநகர்: சாத்தூர் அருகே பட்டாசு தொழிற்சாலையில் ஏற்பட்ட வெடிவிபத்தில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 11 ஆக உயர்ந்துள்ளது. வெடிவிபத்தில் பள்ளி மாணவி உள்பட 11 பேர் பலியாகினர். பட்டாசு தொழிற்சாலை வெடிவிபத்தில் படுகாயமடைந்த 20க்கும் மேற்பட்டோர் சாத்தூர், சிவகாசி, கோவில்பட்டி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். வெடிவிபத்தில் பட்டாசு தொழிற்சாலையின் 4 அறைகள் இடிந்து தரைமட்டமானது.