புதுச்சேரி: புதுச்சேரியில் கடற்கரை சாலையில் கட்டப்பட்டு வரும் புதிய கட்டட திறப்புக்கு தடைவிதிக்க ஆளுநருக்கு உரிமையில்லை என புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி தெரிவித்துள்ளார். கட்டடம் கட்ட மத்திய அரசு நிதி தரவில்லை, உலக வங்கி நிதி தந்ததாக முதல்வர் நாராயணசாமி விளக்கம் அளித்துள்ளார். தேர்தல் நேரத்தில் ஆளுநர் விழாவை நிறுத்த முற்படுகிறார்; ஆளுநரின் செயலை வன்மையாக கண்டிக்கிறோம் என அவர் குறிப்பிட்டார்.