சென்னை: அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சூரப்பா மீதான புகார்களுக்கு முகாந்திரம் உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. சூரப்பா மீதான புகார்களை விசாரிக்கும், கலையரசன் தலைமையிலான ஆணையம் தகவல் தெரிவித்துள்ளது. சூரப்பா நேர்மையானவர் என்று பல்கலைக்கழக ஆசிரியர்கள் கூறுவதில் உண்மையில்லை. விரைவில் சூரப்பாவிடம் விசாரணை நடத்தப்படும் என கலையரசன் ஆணையம் குறிப்பிட்டுள்ளது.