சென்னை: அண்ணா பல்கலைக்கழகத்தில் 2 எம்.டெக் பாடப்பிரிவுகளிலும் மாணவர்களை சேர்க்க முடியாது என ஏ.ஐ.சி.டி.இ தெரிவித்துள்ளது. உயர்நீதிமன்றம் நிர்ணயித்த காலக்கெடு டிசம்பருக்குள் முடிந்துவிட்டது என ஐகோர்ட்டில் ஏ.ஐ.சி.டி.இ தகவல் தெரிவித்தது. தவிர்க்க முடியாத சூழ்நிலைகளில் ஏ.ஐ.சி.டி.இ கால நீட்டிப்பு வழங்க முடியுமா என நீதிபதி புகழேந்தி கேள்வி எழுப்பினார். மாணவர் சேர்க்கை கால அவகாசத்தை நீட்டிக்க கோரி மாநில அரசு பல்கலை. உச்சநீதிமன்றம் செல்ல முடியுமா எனவும் கேள்வி எழுப்பப்பட்டது.