டெல்லி: இந்திய ரயில்வேயில் கடந்த 22 மாதங்களில் நடந்த எந்த விபத்திலும் பயணிகள் உயிரிழப்பு இல்லை என பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார். 2019 மார்ச் 22ம் தேதிக்கு பின் ரயில் பயணிகள் உயிரிழப்பு நிகழவில்லை என்று மாநிலங்களவையில் அமைச்சர் கோயல் தகவல் தெரிவித்தார். திருத்தி அமைக்கப்பட்ட ரயில்வே போர்டில், பயணிகள் பாதுகாப்புக்கு தலைமை இயக்குனர் ஒருவர் நியமனம் செய்யப்பட்டுள்ளார் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.