×

ஆர்ப்பாட்டம்

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்ட ஒருங்கிணைந்த கோகுல மக்கள் கட்சி சார்பில், திருவள்ளூர் எம்ஜிஆர் சிலை அருகே யாதவர்களுக்கு 16 சதவீத தனி இட ஒதுக்கீடு வழங்க கோரி கண்டன ஆர்ப்பாட்டம் நேற்று நடைபெற்றது. இந்த கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு கோகுல மக்கள் கட்சியின் மாநில துணை செயலாளர் கலியராஜ் தலைமை வகித்தார். யாதவர் சங்க  திருவள்ளூர் மாவட்ட தலைவர் முத்துக்கிருஷ்ணன், மாவட்ட மாணவரணி செயலாளர் மோகனகிருஷ்ணன், உள்ளிட்ட பலர் முன்னிலை வகித்தனர்.

இதில் சிறப்பு அழைப்பாளராக கோகுல மக்கள் கட்சியின் நிறுவனத் தலைவர் எம்.வி.சேகர் கலந்துகொண்டு, யாதவர்களுக்கு 16 சதவீத தனி இட ஒதுக்கீடு வழங்க கோரி கண்டன கோஷங்களை எழுப்பினார். பின்னர் இது தொடர்பான மனுவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு சென்று அதிகாரிகளிடம் வழங்கினார்.

Tags : Demonstration , Demonstration
× RELATED காங்.கட்சியினர் ஆர்ப்பாட்டம்