×

தேமுதிக புதிய நிர்வாகிகள் நியமனம்: விஜயகாந்த் அறிவிப்பு

சென்னை: தேமுதிகவில் புதிய நிர்வாகிகளை விஜயகாந்த் நியமித்துள்ளார். தேமுதிக தலைவர் விஜயகாந்த் நேற்று வெளியிட்ட அறிவிப்பு:
தேமுதிக பட்டதாரி ஆசிரியர் அணி துணை செயலாளராக பேராசிரியர் ஜெகன் நியமிக்கப்படுகிறார். ஏற்கனவே, பட்டதாரி ஆசிரியர் அணி துணை செயலாளராக செயல்பட்டு வந்த சி.பாபு (எ) வெங்கடாசலம் விடுவிக்கப்படுகிறார். மாணவர் அணி துணை செயலாளராக சந்திரமோகன் நியமிக்கப்படுகிறார். ஏற்கனவே, மாணவர் அணி துணை செயலாளராக செயல்பட்டு வந்த செல்வகுமார் விடுவிக்கப்படுகிறார். வர்த்தகர் அணி துணை செயலாளராக ஜெ.சண்முகசுந்தரம் நியமிக்கப்படுகிறார். ஏற்கனவே, வர்த்தகர் அணி துணை செயலாளராக செயல்பட்டு வந்த ரவி விடுவிக்கப்படுகிறார்.

தேமுதிக, திருவாரூர் மாவட்ட செயலாளர் சண்முகராஜ் வாகன விபத்து ஏற்பட்டு மருத்துவ சிகிச்சை பெற்று மருத்துவரின் ஆலோசனையின்படி ஓய்வு எடுக்க சொன்ன காரணத்தினால் மாணவர் அணி செயலாளர் விஜயகுமார் திருவாரூர் மாவட்ட பொறுப்பாளராக நியமிக்கப்படுகிறார். இவருக்கு கட்சியினர் அனைவரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags : Temujin ,executives ,Vijaykanth , Dmdk , New Executives, Appointment, Vijayakant, Announcement
× RELATED நியோமேக்ஸ் நிதி நிறுவன மோசடி வழக்கில் மேலும் 4 முக்கிய நிர்வாகிகள் கைது