×

மிஸ் இந்தியா போட்டியில் பட்டம் வென்றார் மனாசா: தெலங்கானாவை சேர்ந்தவர்

மும்பை: ஆண்டுதோறும், ‘மிஸ் இந்தியா’ அழகிப்  போட்டி நடத்தப்படுகிறது. இதில் வெற்றி பெறுவர்கள், உலக அழகிப் போட்டியில் இந்தியா சார்பில் பங்கேற்க தேர்வு செய்யப்படுவார்கள். அந்த வகையில், 2020ம் ஆண்டுக்கான ‘மிஸ் இந்தியா’ அழகிப் போட்டி மும்பையில் நடந்தது. இதன் இறுதிச் சுற்று நேற்று முன்தினம் நடந்தது. இதில், தெலங்கானாவைச் சேர்ந்த  மனாசா வாரணாசி பட்டத்தை வென்றார்.

23 வயதாகும்  மனாசா ஐதராபாத்தில் பிறந்து வளர்ந்தவர். பொறியியல் படிப்பை முடித்த இவர், நிதி தகவல் பரிமாற்ற ஆய்வாளராக பணியாற்றி வருகிறார். கல்லூரியில் படிக்கும் போதிலிருந்தே மாடலிங் துறையில் செயல்பட்டு வந்த மானசா, இந்த ஆண்டு மிஸ் இந்தியா போட்டியில் கலந்துகொண்டு வெற்றி பெற்றுள்ளார்.  

இவருடன் அரியானாவைச் சேர்ந்த மனிகா ஷியோகண்ட் கிராண்ட் இந்தியா அழகியாகவும், உத்தரப்பிரதேசத்தின் மன்யா சிங் 2வது இடத்தையும் பிடித்தனர். வரும் டிசம்பர் மாதம் நடக்க உள்ள 70வது உலக அழகிப் போட்டியில் இந்தியாவின் சார்பில் மானசா வாரணாசி பங்கேற்க உள்ளார்.
2ம் இடம் பிடித்த உபியைச் சேர்ந்த மன்யா சிங், ரிக்‌ஷா ஓட்டுநரின் மகள் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags : Manasa ,pageant ,Miss India ,Telangana , Miss India, award , Manasa
× RELATED மிஸ்கூவாகம்-2024 அழகி போட்டி: விழுப்புரத்தில் நடந்தது