×

ஊத்தி கொடுத்தாண்டி ஒரு ரவுண்டு: அமைச்சர் சி.வி.சண்முகம் பகிரங்க ஒப்புதல்

அனைத்து அதிமுக எம்எல்ஏக்களுக்கும் கூவத்தூரில் வைத்து ஊத்திக் கொடுத்தவர் டிடிவி. தினகரன் என அமைச்சர் சி.வி.சண்முகம் பகிரங்கரமாக ஒப்புதல் வாக்குமூலம் அளித்துள்ளார். திண்டிவனத்தில் நேற்று அமைச்சர் சி.வி.சண்முகம் அளித்த பேட்டி: சசிகலா தனது காரில் அதிமுக கொடி கட்டியது தொடர்பாக சட்டம் தன் கடமையை செய்யும். அதிமுகவை கைப்பற்றுவோம் போவோம் என்று இன்றைக்கு வீரசூரர் ஒருத்தர் சொல்லிக்கிட்டிருக்கிறார். நீ எங்க அதிமுகவை கைப்பற்றுவது.. அது ஒருபக்கம் இருக்கட்டும். முதலில் சசிகலாவுக்கு ஒரு எச்சரிக்கை.  உங்களை காப்பாத்திக்கோங்க.. இந்த தினகரனிடம் இருந்து. தினகரன் சொல்வார், சிலீப்பர் செல்.. சிலீப்பர் செல்.. எந்த சிலீப்பர் செல் நாங்கள் ஓப்பன் செல்லே வச்சுருக்கோம். அந்த ஓப்பன் செல் இந்த வெத்துவேட்டு தினகரன் தான். அவங்கிட்ட இருந்து சசிகலாவையும், அந்த குடும்பத்தையும் காப்பாதிக்கங்க. ஏன்னா, இந்த டிடிவி.தினகரனை நம்பி தான் சசிகலா இந்த கட்சி, இந்த ஆட்சி எல்லாத்தையும் ஒப்படைச்சிட்டு போனாங்க..

மகராஜா இத நல்லா பாத்துக்கோ, நான் 4 ஆண்டு தண்டனை முடிஞ்சி திரும்பி வரும் போது, அப்படியே அலுங்காம குலுங்காம என் கையில கொடு என்று சொல்லிட்டு போனத ஒரே மாசத்தில, ‘கூத்தாடி கூத்தாடி போட்டு உடைச்சான்டி’ கதையா உடைச்சிட்டான். முதல்ல அவன் குடும்பத்தில ஒத்துமையை காப்பாத்திக்க சொல்லுங்க.. இன்னொன்னும் சொல்றேன்.. எப்ப பார்த்தாலும் டிடிவி.தினகரன் சொல்றார்...நிதானமா பேசுனாரா.. நிதானமா பேசுனாரா.. ஆமா, இவர் தான் எனக்கு ஊத்தி கொடுத்தாரு.ஏன்னா அவன் தொழிலு. டிடிவி. தினகரனோட குலத் தொழில் ஊத்தி கொடுக்கிறது தான். ஊத்தி கொடுத்தே குடியை கெடுத்தவனுங்க அவனுங்க.. கூவத்தூரில் அதுமாதிரி தான் ஊத்தி கொடுத்தான். இல்லன்னு சொல்ல சொல்லுங்க அவன.டிடிவி.தினகரனை ஒதுக்கி வைச்சா சசிகலாவ ஏத்துக்குவீங்களான்னு கேட்கிறீங்க... எந்த காலத்திலேயும், எந்த நிலயிலேயும், எந்த சூழ்நிலையிலையும், அதிமுக என்பது ஒன்றரை கோடி தொண்டர்களின் உடல் உழைப்பில, அவங்க ரத்தத்தில உருவாக்கப்பட்டது. இவ்வாறு அவர் கூறினார்.

Tags : round ,Shanmugam , A round of blowing: Minister CV Shanmugam publicly approves
× RELATED ஆசிய சாம்பியன்ஷிப் பேட்மின்டன்; 2வது சுற்றில் சிந்து