×

அரசு நிலம், நீர்வழித்தடங்களில் ஆக்கிரமிப்புகளை இடித்து தள்ளுங்கள் : அதிகாரிகளுக்கு ஐகோர்ட் அதிரடி உத்தரவு

சென்னை:   அரசு நிலம் மற்றும் நீர்வழித் தடங்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை இடித்து தள்ளும்படி அரசு அதிகாரிகளுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.சென்னை ராமாபுரம் பகுதியில் இருந்த சாலையை கோவில் நிர்வாகம் ஆக்கிரமித்துள்ளதாக கூறி அறப்போர் இயக்கம் சார்பில் உயர் நீதிமன்றத்தில் பொது நல வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்சீப் பானர்ஜி மற்றும் நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது.

அப்போது, கோவில் நிர்வாகம் சாலையை ஆக்கிரமித்ததா?, எப்போது இந்த ஆக்கிரமிப்புகள் கண்டறியப்பட்டன என்பன உள்ளிட்ட கேள்விகளை நீதிபதிகள் எழுப்பினர்.அவற்றுக்கு அரசுத்தரப்பில் உரிய பதிலளிக்கவில்லை.
இதையடுத்த நீதிபதிகள் அரசு நிலத்தை கோவில் நிர்வாகம் ஆக்கிரமித்திருந்தாலும், அவற்றை இடித்து தள்ள வேண்டும்.அந்தப்பகுதியை நேரில் ஆய்வு செய்து  சென்னை மாநகராட்சி ஆணையர் அறிக்கை அளிக்க வேண்டும்.இந்த ஆய்வுக் குழுவில், மனுதாரர் பிரதிநிதியும், கோவில் நிர்வாக பிரதிநிதியும் இடம் பெற வேண்டும் என்று அறிவுறுத்தினர்.

இதேபோல, ஆவடி நகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் நீர் வழித்தடத்தில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றக் கோரிய வழக்கை விசாரித்த நீதிபதிகள், அரசியல் காரணங்களுக்காக ஆக்கிரமிப்புகள் மீது அரசு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை.அரசு நிலம் மற்றும் நீர் வழித்தடங்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை இடித்து தள்ள வேண்டும். இதில் பாரபட்சம் காட்ட கூடாது என்று உத்தரவிட்டு வழக்கை தள்ளிவைத்தனர்.

Tags : waterways ,ICC , ஐகோர்ட்
× RELATED ஐசிசி டெஸ்ட் தரவரிசை ஆஸ்திரேலியா நம்பர் 1