×

சூர்யா நலம் பெற பிரார்த்தனை செய்தவர்களுக்கு நன்றி என்று ஒரு வார்த்தையில் சொல்லிவிட முடியாது : நடிகர் கார்த்தி உருக்கம்

சென்னை : ’’அண்ணன் சூர்யா வீடு திரும்பியிருக்கிறார்’’ என்று நடிகர் சூர்யா கொரோனாவிலிருந்து மீண்டு இன்று வீடு திரும்பியதை அவரது தம்பி கார்த்தி ட்விட்டரில் தெரிவித்து இருக்கிறார். தமிழ் திரைப்பட உலகில் முன்னணி நாயகரான சூர்யா சமீபத்தில் கொரோனா காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வெளியான செய்தி அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அதை தொடர்ந்து அவர் உடல் நலம் பெற பலர் பதிவிட்டு வந்தனர்.சூர்யா கொரோனவில் இருந்து குணமடைந்து மீண்டும் சிங்கம் போல் திரையில் தோன்ற மானாமதுரை சூர்யா நற்பணி இயக்கம் சார்பாக மானாமதுரையில் அமைந்துள்ள ஶ்ரீ வழி விடுமுருகன் ஆலயத்தில் சிறப்பு பிராத்தனை செய்தனர். திருவள்ளூர் தெற்கு மாவட்டம், ஆவடியில் அமைந்துள்ள கடும்பாடி சின்னமன் கோவிலில் சிறப்பு வழிபாடு நடை பெற்றது.

இந்த நிலையில் நடிகர் கார்த்தி வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில்,அண்ணன் சூர்யா வீடு திரும்பியிருக்கிறார்.
மருத்துவமனையில் இருந்து இன்று டிஸ்சார் ஆனாலும் இன்னும் சில நாட்கள் அவர் தன்னை தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர். சூர்யா நலம் பெற பிரார்த்தனை செய்தவர்களுக்கு நன்றி என்று ஒரு வார்த்தையில் சொல்லிவிட முடியாது, என்றும் உருக்கமாக தெரிவித்துள்ளார்.

Tags : Karthi Urukkam ,Surya , Thambi Karthi, Surya
× RELATED சூரிய பகவானின் தேரைக் கொண்ட சூரிய கோயில்