சென்னை: தமிழகத்தில் அரசு நிலம், நீர்வழித்தடங்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை இடித்து தள்ள வேண்டும் என்று ஐகோர்ட் கூறியுள்ளது. அறப்போர் இயக்கம் தொடர்ந்த வழக்கில் அரசு அதிகாரிகளுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அரசியல் காரணங்களுக்காக ஆக்கிரமிப்புகள் மீது அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பதில்லை என ஐகோர்ட் தெரிவித்துள்ளது.