திருப்பூர்: இஸ்லாமிய பெருமக்களுக்காக அதிமுக அரசு பல திட்டங்களை செயல்படுத்தி வருகிறது என முதல்வர் பழனிசாமி தெரிவித்தார். திருப்பூர் தெற்கு தொகுதிக்குட்பட்ட சிடிசி பேருந்து நிறுத்தத்தில் தேர்தல் பரப்புரையின் போது முதல்வர் பழனிசாமி தகவல் தெரிவித்தார். அதிமுக அரசைப் பொறுத்தவரை சாதி, மதம் வேறுபாடு பார்ப்பதில்லை என கூறினார்.