×

இங்கிலாந்து - இந்தியா மோதும் 2வது டெஸ்ட் போட்டி!: டிக்கெட் வாங்க சேப்பாக்கத்தில் அலைபோதும் ரசிகர் கூட்டம்..!!

சென்னை: இங்கிலாந்து - இந்தியாயான 2வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி வருகின்ற 13ம் தேதி சென்னையில் நடைபெறவுள்ளது. அதற்கான டிக்கெட்டை பெறுவதற்காக சென்னை சேப்பாக்கத்தில் ரசிகர்களின் கூட்டம் அலைபோதுகிறது. இந்திய அணியுடன் டெஸ்ட் போட்டியில் மோதுவதற்காக இங்கிலாந்து அணி சுற்றுப்பயணத்திற்கு வந்துள்ளது. ஏற்கனவே நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் இந்திய அணி இங்கிலாந்திடம் தோல்வியை சந்தித்திருக்கிறது. இந்த சூழலில் வருகின்ற 13ம் தேதி இங்கிலாந்து - இந்தியா இடையே 2வது டெஸ்ட் போட்டி சென்னை சேப்பாக்கம் ஸ்டேடியத்தில் நடைபெறவிருக்கிறது. கொரோனா நோய் தொற்று அசாதாரண சூழல் காரணமாக கிரிக்கெட் போன்ற விளையாட்டு நிகழ்ச்சிகளுக்கு பார்வையாளர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டிருந்தது.

முதல் டெஸ்ட் போட்டியிலும் பார்வையாளர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டிருந்தது. தற்போது நடைபெறவிருக்கக்கூடிய  2வது டெஸ்ட் போட்டியினை காண்பதற்காக 50 சதவீத பார்வையாளர்களுக்கு அனுமதி கொடுக்க திட்டமிடப்பட்டு அதற்கான டிக்கெட் முன்பதிவு என்பது கடந்த 8ம் தேதி ஆன்லைனில் தொடங்கியிருந்தது. டிக்கெட் விற்பனை தொடங்கிய சில நிமிடத்தில் அனைத்தும் விற்று தீர்ந்தது. தற்போது கவுண்டர்களில் டிக்கெட் வாங்குவதற்காக சேப்பாக்கம் ஸ்டேடியம் அருகே நூற்றுக்கணக்கான ரசிகர்கள் நீண்ட வரிசையில் காத்து கொண்டிருக்கின்றனர்.

அவர்களை ஒழுங்குபடுத்துவதற்கு சில காவலர்களும் இங்கு நிறுத்தப்பட்டுள்ளனர். காலை 7 மணி முதலே இந்த டிக்கெட் வழங்கும் நிகழ்வு தொடங்கப்பட்டுள்ளது. ரூ.100, ரூ.150, ரூ.200 என டிக்கெட் விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. 5 நாட்கள் இந்த டெஸ்ட் போட்டி நடைபெறவிருக்கிறது. இங்கிலாந்து - இந்தியா இடையேயான முதல் போட்டியில் இந்திய அணி தோல்வியை சந்திந்திருந்தாலும் அடுத்து நடைபெறக்கூடிய 2வது போட்டியில் நிச்சயம் இந்திய அணி வெற்றியை கைப்பற்றும் என்று ரசிகர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.


Tags : Test match ,Fans ,England ,India ,Chepauk , England - India, 2nd Test, Ticket, Chepauk, Fan
× RELATED விசா நடைமுறை விதி மீறல்; இங்கிலாந்தில் 12 இந்தியர்கள் கைது