டெல்லி: தமிழக மீனவர்களை கொன்ற இலங்கை கடற்படையை பிரதமர் மோடி கண்டிக்க வேண்டும் என்று அதிமுக எம்.பி.தம்பிதுரை கூறியுள்ளார். இலங்கை கடற்படையின் அத்துமீறலை தடுக்க பிரதமர் நடவடிக்கை எடுக்க தம்பிதுரை மாநிலங்களவையில் வலியுறுத்தியுள்ளார். இதுவரை இலங்கை கடற்படையால் 245 தமிழக மீனவர்கள் கொள்ளப்பட்டு உள்ளதாக எம்.பி.தம்பிதுரை தகவல் தெரிவித்துள்ளார்.