×

அன்னதானம் சாப்பிட வந்தவர்களை அதிமுகவில் இணைத்தனர்: திண்டுக்கல்லில் அமைச்சர் முன்னிலையில் நடந்த கூத்து

திண்டுக்கல்: திண்டுக்கல்லில் அன்னதானம் சாப்பிட வந்தவர்களை அமைச்சர் முன்னிலையில் அதிமுகவினர் கட்சியில் இணைத்த சம்பவம் நடந்துள்ளது. திண்டுக்கல் செட்டிநாயக்கன்பட்டியில் அதிமுக சார்பில் மாற்றுக்கட்சியினர் இணைதல் மற்றும் அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் தலைமை வகித்தார்.

விழாவில் மாற்றுக்கட்சியினர் 500 பேர் அதிமுகவில் இணைவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் ஏற்கனவே கட்சியில் உள்ளவர்களே அதிகளவில் விழாவிற்கு வந்திருந்தனர். விரல் விட்டு எண்ணக்கூடிய அளவே மாற்றுக்கட்சியில் இருந்து வந்திருந்தனர். எனவே எண்ணிக்கையை கூட்ட முடிவு செய்த அதிமுகவினர் ‘டகால்டி’ வேலையில் இறங்கினர். விழாவில் அன்னதானம் சாப்பிட வந்த அப்பகுதியை சேர்ந்த பெண்களை கட்சியில் இணைய வந்தவர்கள் என அறிவித்தனர். இதையடுத்து அமைச்சர் அவர்களுக்கு வேட்டி, சேலைகளை வழங்கினார். அதை பெறுவதற்கு கூட்டத்தில் தள்ளுமுள்ளு ஏற்பட்டதால் பரபரப்பு நிலவியது.


Tags : Annathanam ,Minister ,AIADMK ,Koothu ,Dindigul , AIADMK, Dindigul, Minister
× RELATED பாஜவுக்கு முகவர்கள் இருந்தால்தானே...