×

சாத்தான்குளம் வியாபாரிகள் கொலை வழக்கு: பிரேத பரிசோதனை அறிக்கை தராமல் 7 மாதமாக அலைக்கழிப்பு: டீனிடம் மகள் மனு

கேடிசி நகர்: தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தை சேர்ந்த வியாபாரிகள் ஜெயராஜ், அவரது மகன் பென்னிக்ஸ் ஆகியோர் போலீஸ்நிலையத்தில் அடித்து கொல்லப்பட்ட வழக்கில் இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர், எஸ்ஐக்கள் பாலகிருஷ்ணன்,  ரகு கணேஷ், ஏட்டு முருகன் உள்ளிட்ட 9 பேர் மீது மதுரை சிபிஐ கோர்ட்டில்  குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

ஜெயராஜ், பென்னிக்ஸ் ஆகியோரது உடல்கள் 2020 ஜூன் 26ம் தேதி பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. 10 நாட்களில் இதற்கான அறிக்கை வழங்கப்பட்டு விடும். ஆனால் சம்பவம் நடந்து 7 மாதங்கள் கடந்த பின்னரும் ஜெயராஜின் மகள் பெர்சிக்கு இந்த அறிக்கை வழங்கப்படவில்லை. அவர் தொடர்ந்து அலைக்கழிக்கப்படும் நிலையில், குற்றம் சாட்டப்பட்ட 9 பேரும் அறிக்கையின் நகல்களை பெற்று விட்டனர். இந்நிலையில் ஜெயராஜின் மகள் பெர்சி நேற்று பிரேத பரிசோதனை அறிக்கை கேட்டு நெல்லை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை டீன் ரவிச்சந்திரனிடம் மனு கொடுத்தார்.


Tags : traders ,Sathankulam ,Dean , Satankulam, murder, case
× RELATED நீடாமங்கலத்தில் மேம்பாலப்பணியை...