×

பழநிக்கு போக முடியலையா?: பஞ்சாமிர்தம் வீடு தேடி வரும்

பழநி: பழநி தண்டாயுதபாணி சுவாமி கோயிலில் பிரசித்தி பெற்றது பஞ்சாமிர்தம். திருப்பதிக்கு லட்டு என்பதை போல், பழநி என்றாலே பக்தர்களின் நினைவிற்கு வருவது பஞ்சாமிர்தம். இந்த பஞ்சாமிர்தத்தை தபால்துறை மூலமாக வீட்டில் இருந்தபடியே பெறுவதற்கு வசதி செய்து தமிழக அரசு அரசாணை பிறப்பித்தது. இதன்படி அருகில் தபால் நிலையத்திலோ அல்லது கோயில் இணையதளத்திலோ ரூ.250 கட்டணம் செலுத்தி பதிவு செய்தால் அரை கிலோ எடையுள்ள பஞ்சாமிர்தம் டப்பா, 2 சிறிய விபூதி பாக்கெட்டுகள், 1 ராஜ அலங்கார முருகன் படம் ஆகியவை தபால் மூலமாக வீட்டிற்கே அனுப்பி வைக்கப்படும்.

இத்திட்டம் வரும் 15ம் தேதி துவங்கப்பட உள்ளது. இதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் பழநி கோயில் அலுவலகத்தில் நேற்று போடப்பட்டது. பழநி கோயில் செயல் அலுவலர் கிராந்திகுமார் பாடி, அஞ்சல்துறை தென்மண்டல இயக்குநர் மோகன்தாஸ் ஆகியோர் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.

Tags : house ,Palani ,Panchamirtham , Palani, Panchamirtham
× RELATED உதகை அருகே பைக்காரா படகு இல்லம் 15 நாட்கள் மூடல்