×

மின்சார ரயில்களில் பயணிப்போர்: யூடிஎஸ் செயலி மூலம் டிக்கெட் பெறலாம்: தெற்கு ரயில்வே அறிவிப்பு

சென்னை: மின்சார ரயில்களில் பயணம் செய்பவர்கள் யூடிஎஸ் செயலி மூலம் டிக்கெட்டுகள் பெற்று கொள்ளலாம் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. இது குறித்து தெற்கு ரயில்வே வெளியிட்ட அறிக்கை: கொரோனா காலத்தில் ரயில்நிலையங்களில் மக்கள் கூடுவதை தவிர்க்கும் வகையில் யூடிஎஸ் ஆப் மூலம் புறநகர் மின்சார ரயில்களில் பயணிப்பவர்கள் டிக்கெட் பெற்று கொள்ள வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.

கூகுள் ப்ளே ஸ்டோர் ஆப்பில் யூடிஎஸ் செயலியை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். ரயில் நிலையத்திலிருந்து 5 கிலோமீட்டர் எல்லைக்குள் மட்டுமே முன்பதிவு செய்ய இயலும். இதன் மூலம் முன்பதிவு இல்லாத டிக்கெட்களை பெற்றுகொள்ளலாம். சீசன் டிக்கெட் மற்றும் ப்ளாட்பார்ம் டிக்கெட்களை இந்த செயலியில் பெற முடியாது. இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Tags : Passengers , Electric Rail, Southern Railway, Notice
× RELATED சென்னை மெட்ரோ ரயில்களில் ஏப்ரல் மாதத்தில் 80.87 லட்சம் பயணிகள் பயணம்