×

பெட்ஷீட்டில் செம்மரம் கடத்தியவர் சிக்கினார்

சென்னை: சென்னையில் இருந்து சிங்கப்பூருக்கு சரக்கு விமானம் நேற்று புறப்பட தயாரானது. அந்த விமானத்தில் ஏற்ற வந்திருந்த சரக்கு பார்சல்களை விமான நிலைய சுங்கத்துறையினர் ஆய்வு செய்தனர். அப்போது சென்னையில் உள்ள ஒரு ஏற்றுமதி நிறுவனத்திலிருந்து சிங்கப்பூருக்கு அனுப்ப பெரிய பார்சல்கள் வந்திருந்தன. அந்த பார்சலை பிரித்து பார்த்தபோது பெட்ஷீட்டுகளுக்கிடையே 25 செம்மரக்கட்டைகள் மறைத்து வைக்கப்பட்டிருந்தன. அதன் எடை 500 கிலோ. சர்வதேச மதிப்பு ரூ.25 லட்சம். அவற்றை பறிமுதல் செய்து தனியார் ஏற்றுமதி நிறுவன உரிமையாளரை கைது செய்து விசாரிக்கின்றனர்.

Tags : sheep kidnapper , The sheep kidnapper was trapped in the bedsheet
× RELATED பெட்ஷீட்டில் செம்மரம் கடத்தியவர் சிக்கினார்