×

வாக்களித்த பஞ்சாப் மக்களின் முதுகில் குத்திவிட்டார் சன்னி தியோல்: ஆம்ஆத்மி நிர்வாகி காட்டம்

சண்டிகர்: வாக்களித்த பஞ்சாப் மக்களை சன்னி தியோல் முதுகில் குத்திவிட்டார் என்று பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்த ஆம்ஆத்மி நிர்வாகி காட்டமாக பேசினார். ஆம்ஆத்மி கட்சியின் மூத்த தலைவரும், பஞ்சாப் மாநில இணைத் தலைவருமான ராகவ் சாதா, குர்தாஸ்பூர் உள்ளாட்சி தேர்தல் பிரசாரத்தில் பேசுகையில், ‘பாலிவுட் நடிகரும், பாஜக எம்பியுமான குர்தாஸ்பூரைச் சேர்ந்த சன்னி தியோல், வாக்களித்த பஞ்சாப் மக்களை ஏமாற்றிவிட்டார்.

குர்தாஸ்பூர் மக்கள் நடந்து முடிந்த நாடாளுமன்ற மக்களவை தேர்தலில் வெளிநபர்களை நம்பி வாக்களித்து ஏமாற்றப்பட்டனர். இருந்தும் மக்களால் எம்பியாக தேர்வு செய்யப்பட்ட சன்னி தியோல், தனது தொகுதிக்கோ அல்லது நாடாளுமன்றத்திற்கோ செல்வதில்லை. இதுவரை மக்களவை கூட்டத் தொடரில் மூன்று நாட்கள் மட்டுமே பங்கேற்றுள்ளார். பஞ்சாப் எம்பியாக தேர்வு செய்யப்பட்டும், எப்போதும் அவர் மும்பையிலேயே தங்கி உள்ளார். அவர்கள் மும்பையில் வசிப்பவர்கள்; பஞ்சாபிகள் அல்ல. சன்னி தியோல் எப்போதும் பிஸியாகவே இருப்பார். அவருக்கு பஞ்சாப் மக்களுடன் எந்த தொடர்பும் இல்லை. காரணம் குர்தாஸ்பூரில் உள்ள தெருக்களில் அவரை காணவில்லை என்ற போஸ்டர்களை நிறைய இடங்களில் பார்க்கிறோம். வாக்களித்த பஞ்சாப் மக்களை சன்னி தியோல் முதுகில் குத்திவிட்டார்’ என்றார்.

Tags : Sunny Deol ,voters ,Punjabi ,Aam Aadmi Party , Sunny Deol stabs Punjabi voters in the back: Aam Aadmi Party executive show
× RELATED பெரும்புதூர் நாடாளுன்ற தொகுதியில்...