நாகை:சசிகலாவுக்கு ஆதரவா என்ற கேள்விக்கு அமைச்சர் ஓ.எஸ்.மணியன் பரபரப்பு பதிலளித்துள்ளார்.நாகை சாமந்தான்பேட்டையில் உள்ள நகராட்சி நடுநிலைப்பள்ளி உயர்நிலை பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டுள்ளது. இதற்கான விழா பள்ளியில் இன்று நடந்தது. இதில் கலந்து கொண்ட அமைச்சர் ஓ.எஸ்.மணியன் நிருபர்களுக்கு அளித்த பேட்டி:அதிமுகவை வீழ்த்துவது நமது நோக்கம் அல்ல. அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என்று சசிகலா கூறுகிறார். சசிகலா வெளியில் வந்தால் ஆதரிப்பீர்களா என்று முன்பு கேட்டதற்கு, வெளியில் வரட்டும் பார்ப்போம் என்றீர்கள். இப்போது உங்கள் கருத்து என்ன?4 ஆண்டு காலமாக தமிழகத்தில் அதிமுக ஆட்சி சிறப்பாக நடந்து கொண்டிருக்கிறது. முதல்வர், துணை முதல்வர் தலைமையில் ஆட்சி சிறப்பாக நடந்து வருகிறது. டிடிவி.தினகரன் பேசுவது விநோதமாக உள்ளது. கடந்த தேர்தலில் இரட்டை இலை சின்னத்துக்கு எதிராக களத்தில் இறங்கி வேலைபார்த்தார். 18 எம்எல்ஏக்களை இழுத்து ஆட்சியை முடக்க நினைத்தார் என்றார்.