×

ஜெயலலிதா நினைவிடத்தை பெட்ரோல் குண்டு வீசி தகர்ப்பேன் டிஜிபி அலுவலகத்தில் மனு கொடுத்த வாலிபர் கைது

சென்னை:சென்னை கொருக்குப்பேட்டை பாரதிநகர் குடிசைமாற்று வாரிய குடியிருப்பை சேர்ந்தவர் பெரியசாமி. இவரது மகன் மணிகண்ட பிரசாத்(27). பட்டப்படிப்பு படித்த அவருக்கு வேலை கிடைக்கவில்லை என்று கூறப்படுகிறது.  இந்நிலையில் டிஜிபி அலுவலகத்தில் நேற்று பரபரப்பு புகார் ஒன்று மணிகண்ட பிரசாத் அளித்தார். அந்த புகாரில், தனக்கு அரசு வேலை வழங்க வேண்டும். அப்படி வழங்க வில்லை என்றால் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா நினைவிடத்தை பெட்ரோல் குண்டு வீசி தகர்ப்பேன். அவ்வாறு நான் ஈடுபடும் போது காவல் துறை எந்த வித நடவடிக்கையும் எடுக்க கூடாது என்று புகாரில் கூறியிருந்தார். இந்த மனுவை படித்த காவல்துறை அதிகாரிகள் அதிர்ச்சியடைந்தனர். உடனே சம்பவம் குறித்து மெரினா போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அதன்படி விரைந்து வந்த போலீசார் மணிகண்ட பிரசாத்தை பிடித்து விசாரணை நடத்தினர். அதில் அவர் சற்று மனநலம் பாதிக்கப்பட்டவர் போல் முன்னுக்கு பின் முரணாக பேசி வந்தார். இதையடுத்து போலீசார் மணிகண்ட பிரசாத்தை கைது செய்தனர். பின்னர் அவரை நேற்று இரவு திருவல்லிக்கேணியில் உள்ள லாக் நகர் காப்பகத்தில் அடைத்தனர்.



Tags : office ,memorial ,DGP ,Jayalalithaa , கைது
× RELATED ‘கள்ள ஓட்டு போட்டவரை கண்டு...