×

தமிழகத்தில் யானைகள் இறப்பது தொடர்பான அனைத்து வழக்குகளையும் சிபிஐ விசாரிக்க ஐகோர்ட் கிளை உத்தரவு

மதுரை: தமிழகத்தில் யானைகள் இறப்பது தொடர்பான அனைத்து வழக்குகளையும் சிபிஐ விசாரிக்க ஐகோர்ட் கிளை உத்தரவிட்டுள்ளது. கொடைக்கானலை சேர்ந்த மனோஜ் இம்மானுவேல் என்பவரின் மனுவை விசாரித்த உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. யானைகள் மரணம் தொடர்பாக கீழ்மட்டத்தில் உள்ளவர்கள் மீது மட்டுமே நடவடிக்கை எடுக்கப்படுகிறது. யானைகள் மரணத்தில் வெளி மாநிலத்தவர்களுக்கும் தொடர்பு உள்ளது. வெளிமாநிலங்களில் விசாரணை நடத்த வேண்டி இருப்பதால் சிபிஐ விசாரணைக்கு மாற்றப்படுகிறது எனவும் விளக்கம் அளித்துள்ளது.


Tags : CBI ,elephant deaths ,Tamil Nadu , CBI to probe all cases of elephant deaths in Tamil Nadu
× RELATED குட்கா முறைகேடு தொடர்பான வழக்கில்...