×

கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் தமிழ்மொழி மீதான மத்திய அரசின் ஒடுக்குமுறை தொடர்ந்தால் தமிழகத்தில் மீண்டும் மொழிப்போர் வெடிக்கும்: சீமான் எச்சரிக்கை

சென்னை: கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் தமிழ்மொழி மீதான மத்திய அரசின் ஒடுக்குமுறை தொடர்ந்தால் தமிழகத்தில் மீண்டும் மொழிப்போர் வெடிக்கும் என நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் எச்சரிக்கை விடுத்துள்ளார். முந்தைய காங்கிரசு அரசைவிடப் பன்மடங்கு கூடுதலாகத் தமிழ்மொழி அழிப்பு வேலைகளில் நேரடியாகவும், மறைமுகமாகவும் ஈடுபட்டுவருகிறது மோடி தலைமையிலான பாஜக அரசு. தமிழர்களின் பிறப்புரிமையான தாய்மொழிக் கல்வியைப் பெறுவதில் தடையை ஏற்படுத்தும் விதிகளை உடனடியாகத் திரும்பப்பெற வேண்டும். இல்லையெனில், தமிழர்களின் கடுமையான எதிர்ப்பினைச் சந்திக்க நேரிட்டு, தமிழகத்தில் மீண்டும் மொழிப்போர் வெடிக்குமென எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Tags : Central Government ,schools ,Kendriya Vidyalaya ,Tamil Nadu ,language war ,Seeman , If the Central Government's repression of the Tamil language in Kendriya Vidyalaya schools continues, there will be another war of words in Tamil Nadu: Seeman warns
× RELATED சிறுத்தை நடமாட்டத்தால் அரியலூர்...