×

இஷாந்த் சர்மா 500 விக்கெட் எடுக்கனும்! : அஷ்வின் ஆசை

சென்னை: சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது. முதல் இன்னிங்சில் இஷாந்த் சர்மா 3 விக்கெட்டும், 2-வது இன்னிங்சில் ஒரு விக்கெட்டும் வீழ்த்தினார்.2-வது இன்னிங்சில் ஒரு விக்கெட் வீழ்த்தியது அவரது 300-வது விக்கெட்டாகும். இதன்மூலம் இந்திய வேகப்பந்து வீச்சாளர்களில் 300 விக்கெட்டை வீழ்த்திய 3-வது வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார்.

இந்நிலையில் இஷாந்த் சர்மா 400 விக்கெட் வீழ்த்தவேண்டும் என்று தான் விரும்புவதாக  அஷ்வின் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில் ‘‘இஷாந்த் சர்மா மிகவும் கடின உழைப்பாளி. நான் பார்த்த வரையில் இந்திய அணி அறைகளில் அதிகம் உழைப்பவர் அவராகத்தான் இருக்கமுடியும். 6 அடி 4 அங்குலம் உயரம் கொண்ட அவர் 2007-08-ல் ஆஸ்திரேலியா சென்று ரிக்கி பாண்டிங் விக்கெட்டை வீழ்த்தினார். தற்போது 100 டெஸ்ட் போட்டியை (98-வது போட்டிகளில் விளையாடி வருகிறார்) நெருங்கி வருவது மிக மிக சாதனை. நான் 400, 500 விக்கெட்டுகளை எடுக்கும் இலக்கை நோக்கி செல்ல முடியும். ஆனால் அவர் 400, 500 விக்கெட் வீழ்த்துவதை பார்க்க விரும்புகிறேன். இது பல இந்திய வேகப்பந்து வீச்சாளர்களுக்கு முன்னுதாரணமாக இருக்கும். இஷாந்தின் மிகப்பெரிய பலம் சிரிப்புதான். மிகவும் சோர்வடைந்து இருந்தாலும் கூட சிரித்துக் கொண்டிருப்பார்’’ என்றார்.

Tags : Ishant Sharma ,Ashwin , அஷ்வின்
× RELATED சதுரங்க விளையாட்டு படம்