நெல்லை : சாத்தான்குளம் போலீஸ் தாக்குதலில் கொல்லப்பட்ட தந்தை, மகனின் உடற்கூறாய்வு அறிக்கையை தர மருத்துவமனை மறுப்பு தெரிவித்துள்ளது. தந்தை ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ் உடற்கூறாய்வு ஆய்வறிக்கையை தரக் கோரி மகன் பெர்சி மனுத்தாக்கல் செய்திருந்தார். உடற்கூறாய்வியல் துறையினர் அறிக்கையை தர மறுப்பதால் மருத்துவமனை டீனிடம் ஜெயராஜ் மகள் புகார் தெரிவித்துள்ளார். ஜெயராஜ், பென்னிக்ஸ் உடற்கூறாய்வு முடிந்து 9 மாதங்கள் ஆன பிறகும் அறிக்கையை தர மருத்துவமனை மறுப்பு தெரிவித்துள்ளது. தந்தையின் உடற்கூறாய்வு அறிக்கையை தராவிட்டால் நீதிமன்றத்தை நாடப்போவதாக மகள் பெர்சி அறிவித்துள்ளார்.