×

நீண்ட நாள்களுக்கு பிறகு ராமேஸ்வரம் மீனவர்களுக்கு ஆறுதல் அளித்தது மீன்பாடு

ராமேஸ்வரம் : ராமேஸ்வரத்தில் இருந்து நேற்று முன்தினம் 300க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் மீனவர்கள் பாக் ஜலசந்தி கடலில் மீன்பிடிக்க சென்றனர். இரவு முழுவதும் கடலில் மீன்பிடித்து நேற்று காலை அனைத்து படகுகளும் கரை திரும்பின. மீனவர்கள் வலையில் பேசாளை, மரல், மத்தி, சாளை உட்பட பலவகை மீன்கள் சுமாரான அளவில் பிடிபட்டதால் தொடர்ந்து நஷ்டத்தையே சந்தித்து வந்த மீனவர்கள் ஒரளவிற்கு ஆறுதல் அடைந்தனர். மீன்வரத்து குறைவாக இருந்த போதிலும் நஷ்டம் ஏற்படவில்லை என மீனவர்கள் தெரிவித்தனர்.

Tags : Rameswaram ,fishermen , Rameswaram: More than 300 trawlers from Rameswaram set out to fish in the Bagh Strait yesterday.
× RELATED இலங்கை கடற்படையை கண்டித்து...