திருப்போரூர்: தமிழ் மாநில விவசாய தொழிலாளர் சங்கம் சார்பில் தேசிய ஊரக வேலை திட்ட வேலை நாட்களை 200 நாட்களாக உயர்த்த வேண்டும். குறைந்த பட்ச தினசரி ஊதியத்தை ₹600 ஆக உயர்த்த வேண்டும்.என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திருப்போரூர் ஒன்றிய அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது. இளைஞர் பெருமன்ற தேசியக்குழு உறுப்பினர் ஜெகதீசன், மாவட்ட செயலாளர் பார்த்திபன், மாநில துணை தலைவர் வெங்கடேசன் உள்பட பலர் கலந்து கொண்டுனர்.