×

குடிசை வீட்டுக்கு தீ வைப்பு

கூடுவாஞ்சேரி:  காட்டாங்கொளத்தூர் ஒன்றியம் குமிழி ஊராட்சியில், மேட்டுபாளையம் கிராமம், ஜெஜெ நகரில் உள்ள அரசு புறம்போக்கு நிலத்தில் 100க்கும் மேற்பட்ட ஆதிதிராவிடர் குடும்பத்தினர் வீடு கட்டி வாசிக்கின்றனர். இந்நிலையில், பாமகவினர் நேற்று முன்தினம் இரவு அதே பகுதியில் போட்டி போட்டு குடிசை வீடு கட்டும் பணியில் ஈடுபட்டனர். இதை கண்ட அப்பகுதி ஆதிதிராவிடர் மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால், இருதரப்புக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் ஆத்திரமடைந்த அவர்கள், சரமாரியாக தாக்கி கொண்டனர். அப்போது, 4 குடிசை வீடுகளை சூறையாடி, ஒரு குடிசைக்கு தீ வைத்தனர்.  தகவலறிந்து காயார் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று மோதலில் ஈடுபட்ட பாமகவை சேர்ந்த ேமாகன் (37), உமாபதி (52) மற்றும் சண்முகம் (28), லோகநாதன் (33) ஆகியோர் மீது வழக்குப்பதிந்து கைது செய்தனர்.

Tags : More than 100 Adithravidar families are building houses on government outlying land in JJ Nagar, Mettupalayam village in Kubbila panchayat, Kattagollathoor union.
× RELATED கலைஞர் மகளிர் உரிமை தொகை சமூகநீதி...