×

ஆன்லைன் வகுப்பில் படிக்க சென்ற பள்ளி மாணவி பலாத்காரம்: தோழியின் தந்தை கைது

வேளச்சேரி: ஆன்லைன் வகுப்பில் படிக்க வந்த மாணவியை பலாத்காரம் செய்த தோழியின் தந்தையை போலீசார் கைது செய்தனர். அடையாறு தாமோதரபுரம் புது தெருவை சேர்ந்தவர் சசிகுமார் (43). வீடு புரோக்கர் மற்றும் கட்டுமான தொழில் செய்து வருகிறார். இவரது 12 வயது மகள் அதே பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 6ம் வகுப்பு படித்து வருகிறாள். எதிர் வீட்டை சேர்ந்த இவளது தோழியான 12 வயது சிறுமியும் அதே பள்ளியில் ஒரே வகுப்பில் படிக்கிறாள்.  தினசரி ஆன்லைன் வகுப்பில் படிப்பதற்காக எதிர் வீட்டு சிறுமி, சசிகுமார் வீட்டுக்கு வந்து, தோழியுடன் சேர்ந்து படித்து வந்தாள். அப்போது, எதிர் வீட்டு சிறுமி, சிவகுமாரிடம் பாடத்தில் சந்தேகம் கேட்பது வழக்கம்.

இந்நிலையில், கடந்த 6ம் தேதி தனது வீட்டுக்கு வந்த எதிர் வீட்டு சிறுமியை, வீட்டில் யாரும் இல்லாததை பயன்படுத்தி சசிகுமார் பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதுபற்றி சிறுமி தனது பெற்றோரிடம் கூறினாள். அவர்கள் இதுகுறித்து அடையாறு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில்   புகார் கொடுத்தனர். போலீசார் வழக்கு பதிவு செய்து, சசிகுமாரை போக்சோவில் கைது செய்தனர்.

பேத்திக்கு பாலியல் தொல்லை போக்சோவில் தாத்தா கைது
எம்ஜிஆர் நகரை சேர்ந்த செல்வி (பெயர் மாற்றப்பட்டுள்ளது), தனது 10 வயது மகளுடன் நேற்று முன்தினம்  வியாசர்பாடியில் உள்ள தனது தம்பி வீட்டிற்கு சென்றுள்ளார். அங்கு சிறுமியை வீட்டில் விட்டுவிட்டு தம்பியுடன் வெளியில் சென்றுள்ளார். வீட்டில் செல்வியின் தந்தை ரகு (எ) டேவிட் (60) மட்டும்  இருந்துள்ளார். சிறிது நேரம் கழித்து செல்வி வீடு திரும்பியபோது, மகள் அழுது கொண்டிருப்பததை கண்டு விசாரித்துள்ளார். அப்போது, தாத்தா தனக்கு  பாலியல் தொல்லை கொடுத்ததாக தெரிவித்தாள். இதனால் ஆத்திரமடைந்த செல்வி, எம்கேபி நகர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார், போக்சோ சட்டத்தில் வழக்கு பதிவு செய்து டேவிட்டை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Tags : Schoolgirl raped while attending online class: Friend's father arrested
× RELATED சேலம், அணைக்கட்டில் வீடு, வீடாக சென்று...