×

ஆவடி அருகே கொலை முயற்சி வழக்கில் கைதானவர் மருத்துவமனையில் இருந்து தப்பி ஓட்டம்

ஆவடி: ஆவடி அருகே அதிமுக பிரமுகர் எம்.எம்.மூர்த்தி கொலை முயற்சி வழக்கில் கைதானவர் மருத்துவமனையில் இருந்து தப்பி ஓடியுள்ளார். அதிமுக ஒன்றிய செயலாளர் எம்.எம்.மூர்த்தியை நேற்று 4 பேர் கொண்ட கும்பல் அரிவாளால் வெட்ட முயற்சித்தது. மருத்துவ பரிசோதனைக்கு அழைத்து சென்றபோது கைதி பிரபாகரன் மருத்துவமனையில் இருந்து தப்பி ஓடியுள்ளார். கொலை முயற்சியில் ஈடுபட்ட மேலும் 3 பேரை கைது செய்து திருமுல்லைவாயில் போலீஸ் விசாரணை நடத்துகின்றனர்.

Tags : hospital ,Avadi , Avadi
× RELATED ‘ஐசியு’ நோயாளிகளின் மனநலனை...