நீலகிரி: நீலகிரி சேரம்பாடியில் 3 பேரை கொன்ற சங்கர் என்ற யானையை பிடிக்கும் பணியில் 4வது நாளாக வனத்துறை ஈடுபட்டு உள்ளது. சேரம்பாடி, சப்பந்தோடு, குழி வயல், காப்புக்காட்டில் சுற்றி வந்த காட்டு யானை இன்று நாயக்கன்சோலைக்கு இடம் மாறியுள்ளது. சங்கர் யானையை மயக்க ஊசி செலுத்தி பிடிக்கும் பணியில் வனத்துறையினர் தீவிரமாக ஈடுபட்டு உள்ளனர்.