டெல்லி: 4 தமிழக மீனவர்கள் உயிரிழந்த சம்பவத்தில் இலங்கை கடற்படை அதிகாரிகளை கைது செய்யக்கோரியும், மீனவர்கள் குடும்பத்திற்கு தலா ரூ.5 கோடியை இலங்கை அரசிடம் இருந்து பெற்றுத்தர கோரியும் உச்சநீதிமன்றத்தில் மனு அளிக்கப்பட்டுள்ளது. வழக்கறிஞர் ஜெய் சுகின் தாக்கல் செய்த மனு விரைவில் உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வரவுள்ளது.