×

வேலூர் மாவட்டத்தில் முதல்வரை வரவேற்க காத்திருந்த கூட்டத்தில் துப்பாக்கியுடன் நின்ற நபரால் பரபரப்பு: வெடிகுண்டு, துப்பாக்கி பறிமுதல்

வேலூர்: வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டில் முதல்வரை வரவேற்க காத்திருந்த கூட்டத்தில் துப்பாக்கியுடன் நின்ற நபரால் பரபரப்பு நிலவியது. தமிழக சட்டமன்ற தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது. இதையொட்டி முதலமைச்சரும், அ.தி.மு.க. இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி பழனிசாமி வெற்றி நடைபோடுகிறது தமிழகம் என்ற பெயரில் தமிழகம் முழுவதும் பிரசாரம் செய்து வருகிறார். அந்த வகையில் 5-ம் கட்டமாக இன்று காலை ராணிப்பேட்டை மாவட்டத்தில் தேர்தல் பிரசாரம் செய்தார். இதனைத் தொடர்ந்து வேலூரில் நடக்கும் பொதுக்கூட்டத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பங்கேற்க உள்ளார்.

துப்பாக்கி மற்றும் வெடிகுண்டுகளுடன் நின்ற மர்மநபரை போலீசார் பிடித்தனர். இதனைத்தொடர்ந்து மர்ம நபரை பேரணாம்பட்டு போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இன்று காலை அரக்கோணம் தொகுதி கைனூர் பகுதி தேர்தல் பரப்புரையில் முதல்வர் ஈடுபட்டார். அதிமுக அரசு மக்களுக்கு செய்த நலத்திட்ட பணிக்கை பட்டியலிட்டு பிராச்சாரம் செய்து வருகிறார். அதை தொடர்ந்து தற்போது வேலூர் மாவட்ட்ம் பேரணாம்பட்டில் முதல்வர் பிரச்சாரம் செய்ய உள்ளார். 


Tags : gunman ,crowd ,Vellore district , Vellore, first, with gun, bomb, gun, seizure
× RELATED திருப்பத்தூரில் காலாவதியான குளிர்பானங்கள் விற்ற கடைகளுக்கு அபராதம்