×

முதல்வர் அறிவிப்பு: உத்தரகாண்ட் மாநிலத்திற்கு உதவி செய்ய தயார்

சென்னை: முதல்வர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கை: உத்தரகாண்ட் மாநிலத்தில் பனிப்பாறை உடைந்ததன் காரணமாக சமோலி மாவட்டத்தில் அலக்நந்தா மற்றும் தவுலிகங்கா நதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு சுமார் 10 பேர் உயிரிழந்துள்ளதாகவும் தெரிருகிறது. இந்த வெள்ளப்பெருக்கின் காரணமாக உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தமிழ்நாடு மக்களின் சார்பிலும், தமிழக அரசின் சார்பிலும் ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன். உத்தரகாண்ட்டுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் வழங்க தமிழக அரசு தயாராக உள்ளது.

Tags : Chief Minister ,announcement ,state ,Uttarakhand , Chief Minister's announcement: Uttarakhand ready to help the state
× RELATED ஆபாச வீடியோக்களை வெளியிட்டது யார்?.....