×

சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு 234 தொகுதிகளுக்கும் தேர்தல் பணிக்குழு: எஸ்டிபிஐ அறிவிப்பு

சென்னை: சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு 234 தொகுதிகளுக்கும் தேர்தல் பணிக்குழுவை எஸ்.டி.பி.ஐ. கட்சி அறிவித்துள்ளது. எஸ்.டி.பி.ஐ. கட்சி தலைமை அலுவலகம் வெளியிட்ட அறிவிப்பு: தமிழ்நாட்டில் வரும் சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்ளும் விதத்தில் எஸ்.டி.பி.ஐ. கட்சி அனைத்து தொகுதிகளிலும் தேர்தல் களப்பணிகளை கடந்த ஆறு மாதங்களாக முன்னெடுத்து வருகிறது. அதன் அடிப்படையில்,  தமிழகத்தில் உள்ள அனைத்து சட்டமன்ற தொகுதிகளிலும், தேர்தல் பணிக்குழு அமைக்கப்பட்டுள்ளது.  
துறைமுகம் சட்டமன்ற தொகுதிக்கு தேர்தல் பணிக்குழுவில் ராஜா முஹம்மது, எஸ்.வி.ராஜா, ராஷிக், பக்ருதீன், யாசர் கனி, சிக்கந்தர், இல்யாஸ், ஹுசைன், முஸம்மில், பஹத், ராயல் கரீம், அஜிஸ் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி சட்டமன்ற தொகுதி- ஜீனைத் அன்சாரி, சாகுல் ஹமீது, முஹம்மது ரிஸ்வான், சலீம் ஜாபர், எச்.எம்.எல்.ஹூசைன், சுலைமான், அபுல் பாரிஸ், முக்தியார், உமர் ஷரீப், ஜெயினுல் ஆபிதீன், ராயபுரம்- முஹம்மது ரஷித், புஷ்பராஜ், கோல்டு ரபிக், காஜா மொய்தீன், ஷாநவாஸ், ஆரி ஃபுல்லா, வண்ணை பஷீர், கவுஸ் பாஷா, புல்லட் காதர், அலி, கரீம், ஜப்பான் பஷீர், உசேன், ஜெமிமா, ஜெயஸ்ரீ, ரியானா. ஆலந்தூர்-கே.ஷாஹிர் ஹுசைன், முனிஸ்வரன், முஹம்மது சித்தீக், கனி, இஸ்மாயில், ஆவடி- மஸ்தான், பகதூர்ஷா, அப்துல் கலாம், ஒலி முஹம்மது ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.


Tags : constituencies ,Election Working Group ,announcement ,Assembly ,STBI ,elections , Election Working Group for 234 constituencies ahead of Assembly elections: STBI announcement
× RELATED சென்னை மாவட்டத்தில் 16 சட்டமன்ற...