×

பைக்கில் ஒட்டியிருந்த சிவாஜியின் ஸ்டிக்கரை அகற்ற மறுத்த இளைஞருக்கு கத்தி குத்து

மங்களூரு: இருசக்கர வாகனத்தில் ஒட்டியிருந்த சத்ரபதி சிவாஜியின் ஸ்டிக்கரை அகற்ற மறுத்த இளைஞரை மர்மநபர்கள் கத்தியால் குத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மங்களூருவில் உள்ள லால்பாக் பூங்கா அருகே தீபக் என்ற இளைஞர் தன் இருசக்கர வாகனத்தில் நின்றிருந்தார். அவர் தன் பைக்கில் மராத்திய வீரர் சத்ரபதி சிவாஜியின்  ஸ்டிக்கரை ஒட்டியிருந்தார். அப்போது அங்கு இரண்டு பைக்குகளில் வந்த மர்மநபர்கள் தீபக்கிடம் பைக்கில் ஒட்டியுள்ள சிவாஜியின் ஸ்டிக்கரை அகற்றும்படி கூறினர். தன் பைக்கில் இருந்த சத்ரபதி சிவாஜியின் ஸ்டிக்கரை அகற்ற தீபக் மறுத்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த மர்மநபர்கள் தாங்கள் வைத்திருந்த கத்தியால் தீபக்கை குத்தினர். இதில் தீபக் படுகாயமடைந்தார். இதுகுறித்து தகவலறிந்த உருவே போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து படுகாயமடைந்த தீபக்கை மீட்டு மைசூரு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து தீபக் கொடுத்த புகாரின்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : Shivaji , The young man who refused to remove Shivaji's sticker stuck on the bike was stabbed
× RELATED ரேவண்ணாவுக்கு மருத்துவ பரிசோதனை