×

வணிக வளாகத்தில் தீ விபத்து ரூ.10 கோடி மதிப்பு பொருட்கள் எரிந்து நாசம்

பாகல்கோட்டை: பிளான மின் கசிவு காரணமாக வணிக வளாகத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 20 கடைகள் எரிந்ததுடன் சுமார் ரூ.10 கோடி மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசமான சம்பவம் நடந்தது. பாகல்கோட்டையில் உள்ள இலேகல் பகுதியில் சஜ்ஜன் ஆர்கிடெட் என்ற வணிக வளாகம் இயங்கி வந்தது. இந்த வணிக வளாக கட்டிடத்தில் எலக்ட்ரானிக் கடைகள், சூப்பர் மார்க்கெட் மற்றும் வீட்டு உபயோக பொருட்கள் என பல கடைகள் இயங்கி வந்தது. இந்நிலையில் நேற்று முன்தினம் நள்ளிரவு மின் கசிவு காரணமாக இந்த வணிக வளாகத்தில் திடீரென்று தீ விபத்து ஏற்பட்டது. இதில் 20க்கும் மேற்ப்பட்ட கடைகள் எரிந்து சுமார் ரூ.10 கோடிக்கும் அதிகமான மதிப்புள்ள பொருட்கள் நாசமாகின. இதுகுறித்து அப்பகுதியினர் இலேகல் போலீசாருக்கு தகவல் அளித்தனர். தகவலறிந்து வந்த போலீசாரும், தீயணைப்பு படையினரும் போராடி தீயை அணைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : fire ,shopping mall , Rs 10 crore worth of goods destroyed in a fire at a commercial complex
× RELATED காட்டு தீ ஏற்படாமல் தடுக்க 250 கி.மீ...