சேலம் மாநகர் மாவட்ட தேமுதிக சார்பில், தேர்தல் ஆலோசனை கூட்டம் நேற்று நடந்தது. மாநகர் மாவட்ட செயலாளர் ராதாகிருஷ்ணன் தலைமை வகித்தார். அவைத்தலைவர் செல்வகுமார், பொருளாளர் தனசேகரன் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். மாநில அவைத்தலைவர் டாக்டர் இளங்கோவன் பேசும்போது, ‘தேமுதிகவில் மட்டும் தான் தொண்டர்களின் கருத்தை அடிப்படையாக கொண்டு விஜயகாந்த் தேர்தல் கூட்டணி முடிவை எடுப்பார். அதனால் தேர்தல் பணியாற்ற தயாராக இருங்கள். தேமுதிகவை வெற்றி பெறச் செய்ய வேண்டும்’ என்றார். பகுதி செயலாளர்கள், ஒன்றிய நிர்வாகிகள் பேசுகையில், ‘2006ம் ஆண்டு தேர்தலை போல் தனித்து நிற்க வேண்டும். கூட்டணி அமை்க்கும் பட்சத்தில், பாமக இருக்கும் கூட்டணி வேண்டவே வேண்டாம். அவர்களுடன் இணைந்து தேர்தல் பணியாற்றுவது சிரமம். கிராமங்களில் கடந்த முறை பணியாற்றியது வேதனையையே தந்தது’ என்றனர்.