×

எதிர்வரும் நாட்களில், முதலீடு மற்றும் வேலை வாய்ப்புகளுக்கான இடமாக வங்காளம் இருக்கும்: மாநில முதல்வர் மம்தா பேச்சு.!!!

கொல்கத்தா: எதிர்வரும் நாட்களில், ஒட்டுமொத்த உலகமும் மேற்கு வங்க மாநிலத்தில் இருக்கும் என மாநில முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார். தமிழகம், அசாம் மேற்கு வங்கம் உள்ளிட்ட மாநிலங்களில் விரைவில் சட்டப்பேரவை தேர்தல் நடக்க உள்ளது. இதற்கான தேர்தல் பிரச்சாரத்தில், மாநில மற்றும் தேசிய கட்சிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். குறிப்பாக, மேற்கு வங்க மாநிலத்தில் ஆட்சியை தக்க வைக்க மாநில முதல்வரும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தலைவருமான மம்தா பானர்ஜி தீவிரமாக ஈடுபட்டு வருகிறார். மேற்கு வங்கத்தில் ஆட்சியை பிடிக்க பாஜகவும் தீவிர முயற்சியில் ஈடுபட்டு வருகிறது.

இதற்கிடையே, பாஜகவினர் தேர்தல் பிரச்சாரத்தில்,மேற்கு வங்கம் மம்தா பானர்ஜி ஆட்சியினால் வளர்ச்சியடைவில்லை என்று தொடர்ச்சியாக குற்றம்சாட்டி வருகின்றனர். இந்நிலையில், இன்று தேர்தல் பிரச்சாரத்தில் பேசிய மாநில முதல்வரும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தலைவருமான மம்தா பானர்ஜி, எதிர்வரும் நாட்களில், முதலீடு மற்றும் வேலை வாய்ப்புகளுக்கான இடமாக வங்காளம் இருக்கும். வங்காளம் முன்னேறும், ஒட்டுமொத்த உலகமும் இங்கே வரும் என்று தெரிவித்துள்ளார்.



Tags : Mamata Banerjee. ,Bangladesh , In the coming days, Bangladesh will be a place for investment and job opportunities: Chief Minister Mamata Banerjee !!!
× RELATED பாஜவை திருப்திபடுத்த 7 கட்ட தேர்தல் அட்டவணை: மம்தா விமர்சனம்