திண்டுக்கல்: காதல் திருமணம் செய்து கைவிட்ட கணவரின் வீட்டின் முன் குழந்தைகளுடன் மனைவி தர்ணா பி[போராட்டத்தில் ஈடுபட்டார். திண்டுக்கல் மாவட்டம் பென்னகரம் பகுதியை சேர்ந்த மணிகண்டராஜா என்பவர் சென்னையை சேர்ந்த பிரியாவை 8 ஆண்டுகளுக்கு முன் காதலித்து திருமணம் செய்ததாக கூறப்படுகிறது. அவர்களுக்கு 5 வயதில் ஒரு பெண் குழந்தையும், 8 மாத ஆண் குழந்தையும் உள்ளன. இந்நிலையில் சாதியை காரணம் காட்டி மணிகண்டராஜாவுக்கு வேறு ஒரு பெண்ணுடன் திருமணம் நடைபெற்றதாக அவரது மனைவி பிரியா குற்றம் சாடியுள்ளார்.
இது குறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்காததால் குழந்தைகளுடன் கணவர் வீட்டு முன் அவர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். அப்போது அவரது கணவரும் மாமனாரும், பிரியாவை தாக்கியதாக தெரிகிறது. இதனையடுத்து மருத்துவமனையில் அவர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.