சேலம்: 3 மாதங்களாக சம்பளம் வழங்காததை கண்டித்தது மாநகராட்சி அலுவலகத்தை துப்புரவு தொழிலாளர்கள் முற்றுகை இட்டனர். 100க்கும் மேற்பட்ட துப்புரவு தொழிலாளர்கள் கையில் பானை ஏந்தியபடி ஊர்வலமாக சென்று நூதன முறையில் போராட்டம் நடத்தி வருகின்றனர். வருங்கால வைப்பு நிதி தொகையை செலுத்த கோரியும் போராட்டத்தில் வலியுறுத்தல்.