×

மொழி, நாட்டுக்காக கடுமையாக உழைத்தவர் மதுரையில் கலைஞருக்கு சிலை வைக்க முதல்வரிடம் பேசுவேன்: அமைச்சர் செல்லூர் ராஜூ பேட்டி

மதுரை: மதுரையில் தேவநேய பாவாணர் 119வது பிறந்த தினத்தை முன்னிட்டு, நேற்று அவரது சிலைக்கு அமைச்சர் செல்லூர் ராஜூ மாலை அணிவித்தார். பின்னர் அமைச்சர் செல்லூர் ராஜூ நிருபர்களிடம் கூறியதாவது: மதுரை, சிம்மக்கல்லில் முன்னாள் முதல்வர் கலைஞருக்கு சிலை வைக்க முழு ஒத்துழைப்பு கொடுப்பேன். அவர் மொழிக்காக மட்டுமின்றி, நாட்டு முன்னேற்றத்திற்காகவும் கடுமையாக உழைத்த உழைப்பாளி. அவரது சிலையை இங்கு நிறுவவேண்டும் என ஆதரவு தெரிவித்து, முதல்வர் எடப்பாடி பழனிசாமியிடம் நானே சிபாரிசு செய்வேன். தேமுதிக தனித்து போட்டியிடும் என பிரேமலதா கூறுவது அவரது சொந்த கருத்து. தற்போது வரை அதிமுக கூட்டணியில்தான் தேமுதிக உள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Tags : artist ,Chief Minister ,Cellur Raju ,Madurai ,country , I will talk to the Chief Minister to place a statue of the artist in Madurai who worked hard for the language and the country: Interview with Minister Cellur Raju
× RELATED கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டம்...