×

கேரள மாநிலம் கோட்டயம் அருகே தாயை வெட்டிக்கொன்ற மகன் கைது

திருவனந்தபுரம்: கேரள மாநிலம் கோட்டயம் அருகே திருவாதுக்கல் பகுதியை சேர்ந்தவர் சுசீலா (78). இவரது மகன் பிஜூ (52). சொத்து தகராறு தொடர்பாக பிஜூவும், அவரது பெற்றோருக்கும் இடையே அடிக்கடி தகராறு நடந்து வந்துள்ளது. மேலும் பிஜூவுக்கு குடிப்பழக்கம் இருந்து வந்துள்ளது. இந்த நிலையில் நேற்றிரவு 8 மணியளவில் அருகில் உள்ள திருமண நிகழ்ச்சிக்கு ெசன்று திரும்பி வந்தனர். அப்போது வீட்டில் சுசீலாவும் பிஜூவும் மட்டுமே இருந்தனர். அப்போது அவர்களிடையே திடீரென வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரம் அடைந்த ​பிஜூ, தனது தாயார் சுசீலாவை தலையில் அரிவாளின் பின்பகுதியால் தாக்கினார்.

இதில் படுகாயம் அடைந்த சுசீலா நிலைகுலைந்து மயங்கி தரையில் விழுந்தார். மேலும் ஆத்திரம் அடங்காத பிஜூ தனது தாயாரின் வலது மணிக்கட்டை வெட்டினார். அப்போது சுசீலாவின் கணவர் தம்பி வீட்டிற்கு வந்தார். மனைவியின் நிலை கண்ட அவர் தப்பிக்க முயன்றபோது, ​​பிஜூ தனது தந்தையை சுத்தியலால் தாக்கினார். இதில் வலியால் தம்பி அலறினார். சப்தம் கேட்வு பக்கத்து வீட்டுக்காரர் விரைந்து வந்து பார்த்தபோது சுசீலா ரத்த வெள்ளத்தில் உயிருக்கு ேபாராடி கொண்டிருந்தார். இதையடுத்து அக்கம்பக்கத்தினர் அங்கு திரண்டனர். அவர்கள் சுசீலா மற்றும் தம்பிைய மீட்டு அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

ஆனால் சிகிச்சை பலனின்றி சுசீலா இறந்தார். படுகாயம் அடைந்த தம்பி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். சம்பவம் குறித்த புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்த வெஸ்ட் போலீசார் பிஜூவை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.


Tags : Kottayam ,Kerala , Son arrested for hacking mother near Kottayam, Kerala
× RELATED கேரளாவில் ஓடும் ரயிலில் குமரி மாடல் அழகியிடம் அத்துமீறிய வாலிபர் கைது